கொடைக்கானல் செல்ல இபாஸ் முறை நீட்டிப்பு

மதுரை: கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளி மாநிலம், வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஐகோர்ட் உத்தரவுப்படி இ-பாஸ் பதிவு செய்யும் நடைமுறை அமலில் உள்ளது. இந்த பதிவு முறையை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

இன்றைய நிலவரப்படி, இதுவரை 17,20,277 பயணிகள் மற்றும் 2,90,700 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டது. அதில் 7,15,390 பயணிகள் , 1,09,760வாகனங்கள் வருகை புரிந்துள்ளனர்.


நீலகிரி மாவட்டத்தல் கடந்த மே 7 மாதம் முதல் , செம்டம்பர் 30 வரை 2,77,000 லட்சம் . வாகனங்களுக்கு , இ.பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது,மற்றும் 13,12,800 பேர் இ.பாஸ் மூலம் வந்துள்ளனர் என கலெக்டர் லட்சுமி பவ்யா கூறியுள்ளார்.

Advertisement