தண்டையார்பேட்டை பெண் மர்ம மரணம்
காசிமேடு, தண்டையார்பேட்டை, முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் நம்பிராஜன், 30. இவரது மனைவி நவீனா, 30. இவர்களுக்கு 6 வயதில், சாய் சுலாஸ் என்ற மகன் உள்ளார்.
நம்பிராஜனுக்கு மூன்று மாதங்களுக்கு முன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன் நவீனாவிற்கு இந்த விபரம் தெரிந்து, கணவருடன் சண்டையிட்டுள்ளார்.
நவீனாவை, அவரது பெற்றோர் சமாதானம் செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு நம்பிராஜனும், அவரது மகன் சாய் சுலாஸ் வீட்டின் படுக்கை அறையில் துாங்கினர்.
நேற்று காலை நம்பிராஜன் எழுந்து பார்த்தபோது, நவீனா மின்விசிறியில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தற்கொலையா, கொலையா என தெரிய வரும். காசிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement