தி.மு.க., கவுன்சிலர் மீது பெண் அதிகாரிகள் புகார்
மதுரவாயல்,மதுரவாயல், வி.ஜி.பி., அமுதா நகர் கூவம் கரையோரம், சென்னை குடிநீர் வாரியம் சார்பில், கடந்த 2019ம் ஆண்டு முதல் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகளை, நாகராஜன் கன்ஸ்டிரக் ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் எடுத்து செய்து வருகிறது.
கடந்த 20 நாட்களாக, சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம், 144வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஸ்டாலின், அவரது ஆதரவாளர்களை வைத்து, அங்கு பணி செய்யக் கூடாது என நேரிலும், தொலைபேசியிலும் உதவி பொறியாளர், ஒப்பந்ததாரரை மிரட்டுவதாக கூறப்படுகிறது.
மேலும், ஒப்பந்ததாரரிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர் மகாலட்சுமி, உதவி பொறியாளர் கலைச்செல்வி ஆகியோர், கோயம்பேடு காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement