உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரி வில்லியனுாரில் ஆர்ப்பாட்டம்

வில்லியனுார் : புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கோரி புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வில்லியனுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில செயலாளர் பரந்தாமன் தலைமை தாங்கினார். ஆதி திராவிடர் நலன் அணி மாநில தலைவர் ரஞ்சித்குமார், ரவி, மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். பொதுச்செயலாளர் ராஜன், சேர்மன் வெங்கட்ராமன் ஆகியோர் நோக்க உரையாற்றினார்.மாநில தலைவர் பேராசிரியர் ராமதாஸ்,உள்ளாட்சி தேர்தலை நடத்தாத மத்திய, மாநில அரசை கண்டித்து பேசினார். ஜெகநாதன், மாநில இணை செயலாளர் இளங்கோவன், துணை செயலாளர் சுப்ரமணியன், சந்திரன், தனஞ்செயன், இதயவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். உதவி செயலாளர் ஆண்டாள் நன்றி கூறினார்.

Advertisement