பெயிண்டர் தற்கொலை போலீசார் விசாரணை
புதுச்சேரி, : பெயிண்டர் துாக்குப் போட்டு தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முத்தியால்பேட்டை, சின்னையாபுரம் ஏழை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி, 45; பெயிண்டர். வேலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்தார்.
அவரது மனைவி அருகில் உள்ள சர்ச்சிக்கு சென்ற நிலையில், அந்தோணிசாமி வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement