மயங்கி விழுந்து ஒருவர் சாவு
திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் அடுத்த குமாரப்பாளையம் ஜெ.வி.ஆர். நகரை சேர்ந்தவர் தணிகாசலம், 50; தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு, கல்பனா என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர்.
தணிகாசலம், நீரிழிவு மற்றும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளாக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று காலை தணிகாசலம் வீட்டில் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.
அவரை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு, டாக்டர் பரிசோதித்து தணிகாசலம் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement