மது விற்ற 4 பெண்கள் சிக்கினர்
திருவொற்றியூர், திருவொற்றியூர், எம்.ஜி.ஆர்.நகர், திருவொற்றியூர் குப்பம் போன்ற பகுதிகளில், காந்தி ஜெயந்தி விடுமுறை நாளில், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
திருவொற்றியூர் போலீசார், நேற்று முன்தினம் இரவு, சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சட்டவிரோதமாக மதுபானம் விற்ற மேரி, 60, உமா, 55, அஞ்சலை, 60, சுந்தரவல்லி, 61, ஆகிய நால்வரையும் பிடித்தனர். 50 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement