மஞ்சள்நீர் கிளை கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்

காஞ்சிபுரம்:வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் செல்லும் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, நீர்வள ஆதாரத் துறை, மாநகராட்சி, நகராட்சி, ஊரக உள்ளாட்சி, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

காஞ்சிபுரம் கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லையில் உள்ள இரட்டை கால்வாய், தும்வனம் கால்வாய், மஞ்சள் நீர் கால்வாய் துார்வாரும் பணியை மாநகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது. இதில், பொக்லைன் இயந்திரம் வாயிலாக கால்வாய் துார்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், மேட்டுத் தெருவில் இருந்து வரும் மஞ்சள்நீர் கிளை கால்வாய் எம்.எம்.அவென்யூ, விளக்கடிகோவில் தெரு, டி.கே.நம்பி தெரு வழியாக சென்று வேகவதி ஆற்றில் இணைகிறது.

இக்கால்வாயையும் துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், மஞ்சள்நீர் கிளை கால்வாய் துார்வாரும் பணி துவக்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகிறது.

Advertisement