திருப்பதி லட்டு விவகாரம்; விசாரணைக்குழு அமைத்தது சுப்ரீம் கோர்ட்!
புதுடில்லி: 'திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்தது தொடர்பான விசாரணைக்கு, சுப்ரீம் கோர்ட் புதிய குழு அமைத்தது. புதிய விசாரணைக்குழுவில் ஆந்திர அரசின் விசாரணை அதிகாரிகள் இருவர், சி.பி.ஐ., இயக்குனர் நியமிக்கும் அதிகாரிகள் இருவர், உணவு தர நிர்ணய ஆணைய அதிகாரி ஒருவர் என 5 பேர் இடம் பெறுவர் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
@1brஆந்திராவின் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் வழங்கும் லட்டு தயாரிப்பில், விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சமீபத்தில் குற்றம் சாட்டினார். ஆய்விலும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரி, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சமீபத்தில் வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்,' அரசியல் விவகாரங்களில் இருந்து கடவுள்களை விலக்கி வைத்திருக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கு, இன்று(அக்.,04) மீண்டும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
* சி.பி.ஐ., போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை இணைந்து விசாரிக்க வேண்டும்.
* லட்டு விவகாரத்தில் நீதிமன்றத்தை அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்துவதை விரும்பவில்லை.
* எஸ்.ஐ.டி., விசாரணையை சி.பி.ஐ., மேற்பார்வையின் கீழ் விசாரித்தால் நம்பகத்தன்மை அதிகரிக்கும் எனக் கூறி புதிய விசாரணைக் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
* ஆந்திரா அரசின் விசாரணை அதிகாரிகள் இருவர், சி.பி.ஐ., இயக்குனர் நியமிக்கும் அதிகாரிகள் இருவர், உணவு தர நிர்ணய ஆணைய அதிகாரி ஒருவர் கொண்டதாக, சிறப்பு புலனாய்வுக்குழு இடம்பெறுவர் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆந்திரா முதல்வர் வரவேற்பு
இது குறித்து சமூகவலைதளத்தில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள பதிவில், ' இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறேன். ஓம் நமோ வெங்கடேசா!' என குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (10)
venugopal s - ,
04 அக்,2024 - 14:27 Report Abuse
உச்ச நீதிமன்றம் மூலமாக உண்மை வெளிப்படும் என்று நம்புவோம்!
0
0
Reply
Srinivasan Krishnamoorthi - CHENNAI,இந்தியா
04 அக்,2024 - 14:18 Report Abuse
வர வர உச்ச நீதிமன்றம் போக்கு ஒரு மாதிரி தான் இருக்கு.
நீதிமன்றத்தின் வேலை மட்டும் செய்தால் போதுமே
0
0
Reply
Constitutional Goons - Tamilnadu,இந்தியா
04 அக்,2024 - 13:57 Report Abuse
வேலை வெட்டிங் இல்லாத வெட்டிங் தெண்டங்கள்
0
0
Reply
SRISIBI A - erode,இந்தியா
04 அக்,2024 - 13:31 Report Abuse
உச்ச நீதி மன்றம் எந்த இனத்திற்கு செயல் படுகின்றது என புரியவில்லை இதுபோல் 20 வருடமாகி விசாரிக்காத முடிவுறாத வழக்கு குறித்து தனியாக விசாரிக்க முடியுமா ???
0
0
Reply
Jysenn - Perth,இந்தியா
04 அக்,2024 - 13:09 Report Abuse
It means a clean chit to the tallow criminals. The SC never lets down the high profile criminals.
0
0
Reply
வைகுண்டேஸ்வரன் - Chennai,இந்தியா
04 அக்,2024 - 12:48 Report Abuse
சந்திரபாபு நாயுடு அசிங்கப்பட்டு நிக்கறார். ஜூலை யில் வந்த ரிப்போர்ட். 2 மாசம் தூங்கினார். வேற ஏதோ அவலத்திலிருந்து மக்கள் கவனத்தை ச. பா. நாயுடு திசை திருப்பிட்டார்.
0
0
vadivelu - thenkaasi,இந்தியா
04 அக்,2024 - 13:35Report Abuse
இடி போல் விழ போகிறது ஜெகனுக்கு, அது தெரியாமல் கனவில் இருக்காதீர்கள்.
0
0
Reply
INDIAN - chennai,இந்தியா
04 அக்,2024 - 12:31 Report Abuse
விலங்குகளின் கொழுப்பு சாதாரணமாகன வெப்பநிலையில் உருகாது , ஆட்டு கொழுப்பே கூட சமையல் செய்கிற வெப்பநிலையில் அதாவது 100 டிகெரி வெப்பநிலையில் கூட உருகாது , நெய் 50 -60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உருகிவிடும் , அதாவது நமது சுற்றுப்புற வெப்பநிலையை விட சிறிது அதிகாமானாலே உருகிவிடும் ஆகவே இதை சமைப்பவர்கள் எளிதாக கண்டுபிடித்துவிட முடியும் . ஆகவே இதற்கு வாய்ப்பில்லை , ஒருவேளை அப்படி நடந்திருந்தால் அது அங்கு சமைப்பவர்களுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை . இதற்கும் மேல் ஏதோ வகையில் அப்படி நடந்திருந்தால் அதை வெளியுலகுக்கு தெரியாமல் சரிசெய்து அதற்க்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், அதை விடுத்து இந்த விஷயத்தை பொதுவெளிக்கு கொண்டுவந்தது மிகப்பெரிதா தவறு . ஒரு முதல்வருக்கு இது அழகல்ல ,
0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04 அக்,2024 - 12:15 Report Abuse
இப்பொழுது விசாரணைக்குழு அமைத்து என்ன பயன்? ஏன் கேட்கிறேன் என்றால், விசாரணைக்கு அன்று ஜெகன் ஆட்சியில் தயாரித்த லட்டுகள் தேவைப்படும், பரிசோதிக்க. அவைகள் இன்று கிடைக்குமா?
0
0
வைகுண்டேஸ்வரன் - Chennai,இந்தியா
04 அக்,2024 - 12:45Report Abuse
வேண்டாம். சந்திரபாபு நாயுடு ஆட்சியில் தயாரித்த லட்டுகள் போதும். இந்த லட்டுகளைப் பரிசோதித்தால் போதும். ஆனால், குஜராத் லேப் சரிப்படாது. ஏனெனில், அதன் முதல் டெஸ்ட் ரிப்போர்ட் தெளிவில்லாமல் இருக்கிறது.
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement