திருப்பூரில் களைகட்டிய கொலு வழிபாடு

திருப்பூர் : நவராத்திரியின் இரண்டாவது நாளான நேற்று, கோவில்களில் கொலு வழிபாடு களைகட்டியிருந்தது; குலால மகளிர் அணி சார்பில், கரட்டாங்காடு குலாலர் சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில், நவராத்திரி கொலு வழிபாடு நடந்து வருகிறது. தினமும் மாலை, 6:00 மணிக்கு, தேவியின் வழிபாட்டு பாடல்களும், சிறப்பு பூஜைகளும், அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.

 திருப்பூர் பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவிலில், நவராத்திரி கொலு வழிபாடு நடந்து வருகிறது. தினமும் மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு ஆரத்தி வழிபாடும், தொடர்ந்து, கூட்டு பஜனை, பக்திபாடல்கள், கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இரண்டாவது நாளான நேற்று, குழந்தைகளின் கலை நிகழ்ச்சியும் நடந்தது.

Advertisement