ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் ஆராதனை விழா; ஊஞ்சலுாரில் ரயில்கள் நின்று செல்லும்

சேலம்: ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் ஆராதனை விழாவுக்காக, டிச., 18 முதல், 25 வரை, ஊஞ்சலுாரில் ரயில்கள் நின்று செல்லும்.


சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், ஊஞ்சலுாரில் உள்ள சத்குரு ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் அதிஷ்டானத்தில், 96 வது ஆராதனை விழா நடைபெறுவதால், டிச., 18 முதல், 25 வரை கீழ்கண்ட ரயில்கள், ஈரோடு-கரூர் இடையே உள்ள ஊஞ்சலுாரில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

மைசூரு-கடலுார் துறைமுகம் எக்ஸ்பிரஸ், மைசூரு-துாத்துக்குடி எக்ஸ்பிரஸ், தாம்பரம்-மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ், திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ், மங்களூரு சென்ட்ரல்-தாம்பரம் எக்ஸ்பிரஸ், கடலுார் துறைமுகம்-மைசூரு எக்ஸ்பிரஸ், துாத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் டிச., 18 முதல், 25 வரை ஒரு நிமிடம் ஊஞ்சலுாரில் நின்று செல்லும். ஆராதனை விழாவில் பங்கேற்போர், இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement