ஐ.டி., பெண் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

ஒயிட்பீல்டு: பி.ஜி.,யின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து, ஐ.டி., பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். 'தன் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம்' என, கடிதம் எழுதி உள்ளார்.

ஆந்திர மாநிலம், கடப்பாவைச் சேர்ந்தவர் கவுதமி, 25. பெங்களூரு ஒயிட்பீல்டில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்தார். பிரசாந்த் லே - அவுட்டில் உள்ள பி.ஜி., எனும் தங்கும் விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு பி.ஜி.,யின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். தலையில் பலத்த காயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

ஒயிட்பீல்டு போலீசார் பி.ஜி.,க்கு சென்று, கவுதமியுடன் தங்கி இருந்தவர்களிடம் விசாரித்தனர். கவுதமி இடத்தில் இருந்து, ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், 'தற்கொலை செய்து கொள்கிறேன். என் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம். எனது மரணம் பற்றி விசாரிக்க வேண்டாம். உடலை பெற்றோரிடம் கொடுத்து விடுங்கள். சாரி, அப்பா, அம்மா' என, எழுதி இருந்தார்.

Advertisement