சங்கராபுரத்தில் முப்பெரும் விழா

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் காந்தி ஜெயந்தி, உலக அமைதிக்காக சர்வ சமய பிரார்த்தனை, இன்னர் வீல் கிளப் குடும்பங்கள் சந்திப்பு என முப்பெரும் விழா நடந்தது.

வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ், ஓய்வூதியர் சங்கத் தலைவர் கலியமுர்த்தி, மருந்து வணிகர் சங்க மாவட்ட தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். கல்யாணி வரவேற்றார்.

சைவசித்தாந்த அமைப்பாளர் ஜம்புலிங்கம், தலைமை ஆசிரியர் ஜான்வெஸ்லி, லியாகத் அலி முன்னிலையில் சர்வ சமய பிரார்த்தனை நடந்தது. பொது சேவை அமைப்புகள் சார்பில் வயநாடு நிலச்சரிவிற்கு 1.25 லட்சம் வசூலித்து வழங்கிட துணை நின்ற ரோட்டரி டிரஸ்ட் சேர்மன் ஜனார்தனன், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன் கவுரவிக்கப்பட்டனர்.

ஓய்வு பெற்ற கலால் துணை ஆணையர் சண்முக சுந்தரம், தமிழ் படைப்பாளர் சங்க தலைவர் சுப்பராயன், விஜயகுமார், ரோட்டரி தலைவர் அசோக்குமார், செயலாளர் சங்கர், இன்னர் வீல் கிளப் தலைவி சுபாஷினி, தீபா, தியாகதுருகம் தமிழ்ச் சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன், பேருராட்சி சேர்மன் ரோஜாரமணி, ஆசிரியர் லட்சுமிபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement