விபத்தில் சிக்கிய குதிரை; உயிருக்கு போராடும் பரிதாபம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே விபத்தில் : யமடைந்த குதிரை, 2 நாட்களாக, உயிருக்கு போராடி வருகிறது.

விழுப்புரம் அடுத்த காணை பி.டி.ஓ., அலுவலகம் அருகே வெள்ளை நிற குதிரை நேற்று முன்தினம் சாலையோரம் மயங்கிக் கிடந்தது. கிராம மக்கள் சென்று பார்த்ததில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நடக்க முடியாத நிலையில் இருப்து தெரிய வந்தது.

காணை அரசு கால்நடை மருத்துவர், குதிரையை பரிசோதித்து சிகிச்சை அளித்தார். பின், நேற்று பிற்பகல் வரை அதே இடத்தில் உடல்நிலை தேறாமல் படுத்து கிடந்தது.

தகவலறிந்த காணை ஊராட்சி தலைவர் கமல் மற்றும் அப்பகுதி மக்கள், கால்நடை மருந்தகத்திற்கு சென்று, குதிரைக்கு சிகிச்சை அளிக்க கோரினர்.

கால்நடை மருத்துவர் நேற்று மீண்டும் சிகிச்சை அளித்தும் முன்னேற்றம் இல்லை.

இதையடுத்து குதிரியை சின்னம் கால்நடை மருத்துவ பல்கலை கழகத்திற்கு கொண்டு செல்ல கிராம மக்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Advertisement