நவராத்திரி வழிபாடு; 3ம் நாள் கோலாகலம்
திருப்பூர் : நவராத்திரியின், மூன்றாம் நாள் கொலு வழிபாடு நேற்று, கோவில்களில் நடைபெற்றது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு, கோவில்கள் மற்றும் வீடுகளில், பக்தர்கள் கொலு வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், தீர்த்தக்குளத்தில், சிவலிங்கமும், நந்தியும் அருள்பாலிப்பது போல் அமைத்து வழிபாடு நடந்து வருகிறது.
வீடுகளில், கொலு வழிபாடு நடத்த இயலாத பக்தர்கள், கூட்டாக சேர்ந்து கோவில்களில் கொலு வைத்து வழிபட்டு வருகின்றனர். மூதல் மூன்று நாள் அம்பிகை வழிபாடும், அடுத்த மூன்று நாள் லட்சுமி வழிபாடு; கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடும் நடக்கிறது.
நேற்றுடன், அம்பிகை வழிபாடு நிறைவடைந்தது. கோவில்களில் நடக்கும் நவராத்திரி விழாவில், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் களைகட்டியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement