உழவர் சந்தைகளில் ரூ.1.48 கோடிக்கு விற்பனை
சேலம்: சேலம் மாவட்டத்தில், 13 உழவர்சந்தைகள் உள்ளன. புரட்டாசி, 3ம் சனியான நேற்று, காலை முதலே ஏராளமான நுகர்வோர், உழவர் சந்தைகளுக்கு வந்ததால், விற்பனை விறுவிறுப்பாக காணப்பட்டது.
காய்கறி, பழ வகைகள், தேங்காய், வாழை இலை, பல்வகை பூக்கள் என, 336.69 டன் உணவுப்பொருட்கள் வரத்து இருந்தன. இதன்மூலம், 1.48 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கடந்த வாரம், 1.25 கோடிக்கு விற்பனை நடந்தது. இதனுடன் ஒப்பிடுகையில் நேற்று, 23 லட்சம் ரூபாய்க்கு விற்பனை அதிகரித்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement