போதைப்பொருளை ஒரு கிராம் கூட தமிழக போலீசார் பிடிப்பதில்லை: குற்றம் சாட்டுகிறார் கவர்வர் ரவி
தென்காசி: போதைப்பொருளை ஒரு கிராம் கூட தமிழக போலீசார் கைப்பற்றியதாக தகவல் இல்லை என கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்த போதை ஒழிப்பு மாநாட்டில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, zoho நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு, தென்காசியின் குரல் பவுண்டேசன் தலைவர் ஆனந்தன், மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது:
* தமிழகத்தில் மத்திய துறையினர் பல கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றுகின்றனர்.
* தமிழகத்தில் மாநில போலீசார் கஞ்சா தவிர பிற போதைப் பொருட்களை கைப்பற்றியதாக தகவல் இல்லை.
* மத்திய துறையினர் தான் கிலோக்கணக்கில் கைப்பற்றுகின்றனர்.
* போதைப்பொருள் கிடங்குகள் பாக்., துபாய், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுகின்றன. இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement