ரூ.1,800 கோடி போதை பொருட்கள் பறிமுதல்; மகத்தான வெற்றி என்கிறார் மத்திய அமைச்சர்!

6

புதுடில்லி: மத்தியபிரதேச மாநிலம் போபால் அருகே ஒரு தொழிற்சாலையில், ரூ.1,814 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன; இருவர் கைது கைது செய்யப்பட்டுள்ளதாக, மத்திய உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி இன்று தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது:

போபால் அருகே ஒரு தொழிற்சாலையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருட்களின் மதிப்பு 1,814 கோடி ரூபாய். போதைப்பொருட்கள் பறிமுதல் செய்ததோடு, இருவர் கைது செய்யப்பட்டனர்.

பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) மற்றும் டில்லி போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (என்சிபி) இணைந்து இந்த நடவடிக்கை எடுத்தனர்.

போதைக்கு எதிரான போராட்டத்தில், மகத்தான வெற்றியைப் பெற்ற ஏ.டி.எஸ்., மற்றும் என்.சி.பி.,க்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

Advertisement