மண் கடத்தல் 2 பேர் கைது

எருமப்பட்டி: கொல்லிமலை அடிவாரம், கெஜகோம்பையில் அரசு புறம்-போக்கு நிலம் உள்ளது. இங்கு இரவில் தொடர்ந்து கிரவல் மண் வெட்டி, லாரிகளில் கொண்டு சென்று கூடுதல் விலைக்கு விற்-பனை செய்யப்பட்டு வந்தது.


இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 10க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் மண் வெட்டி கடத்-துவதாக, டி.எஸ்.பி., ஆகாஷ் ஜோசிக்கு தகவல் கிடைத்தது.


இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், மண் வெட்டிக்-கொண்டு சென்ற லாரியை மடக்கி பிடித்தனர். இதையடுத்து, லாரியை ஓட்டி வந்த பழையபாளையத்தை சேர்ந்த வினோத்-குமார், 37, நித்தீஸ்குமார், 25, ஆகியோரை கைது

செய்து சிறையில் அடைத்தனர். மேலும், ஒரு லாரியை பறிமுதல் செய்-தனர்.

Advertisement