விவசாயிகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி: இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மாநில அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
விருதுடன் முதல் பரிசாக ரூ. ஒரு லட்சம், 2ம் பரிசாக ரூ.60 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.40 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தை சேர்ந்த சொந்த நிலம் வைத்து விவசாயம் செய்யும் விவசாயிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பதிவு கட்டணமாக ரூ. 100 செலுத்தி அக்.31க்குள் www.tn.horticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என, தோட்டக்கலை துணை இயக்குனர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement