திருக்கல்யாண உற்சவம் 

செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

அதனையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 11:00 மணிக்கு ஜனனி நாட்டியாலயா குழுவினரின் நடனத்துடன், சீர் வரிசை பொருட்களுடன் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணர் உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளினார்.

குமார் பட்டாச்சாரியார் திருக்கல்யாணத்தை நடத்தினார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement