புகார் பெட்டி..

சாலையோர மண்ணால் விபத்து



விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையோரம் குவிந்த மண்ணை அகற்றாததால் பஸ், லாரி செல்லும் போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்களில் மண் விழுந்து விபத்து ஏற்படுகிறது.

செல்லதுரை, மகாராஜபுரம்.

மினி குடிநீர் தொட்டி சேதம்



வளத்தி - செஞ்சி மெயின் ரோட்டில் நீலாம்பூண்டியில் மினி குடிநீர் தொட்டி சேதமாகியுள்ளது.

மோகன், நீலாம்பூண்டி.

எச்சரிக்கை பலகை தேவை



மேல்மலையனுார் அடுத்த கப்ளாம்பாடியிலிருந்து எதப்பட்டு செல்லும் வழியில் ஆணித்தாங்கல் பகுதியில் சாலை வளைவுகளில் விபத்துகளைத் தவிர்க்க எச்சரிக்கை பலகை அமைக்கப்படுமா?

காத்தமுத்து, தாழங்குணம்.

Advertisement