பெண்ணைத் தாக்கிய வாலிபர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் பெண்ணைத் திட்டி, தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் மகன் முகமது அனீஸ், 30; இவர், வி.மருதுாரில் ஒரு வீட்டின் மாடியில் இருந்து வேறு பெண்ணுடன் பேசியுள்ளார். இதனை வீட்டின் பெண் உரிமையாளர் முகமது அனீசை கண்டித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து தட்டிக்கேட்ட அந்த பெண்ணின் மகள் மற்றும் மருமகனை திட்டி, தாக்கினார்.

புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் முகமது அனீஸ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement