அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்

விழுப்புரம்: கோலியனுாரில் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

முன்னாள் சேர்மன் விஜயா, மாவட்ட நிர்வாகிகள் லட்சுமி நாராயணன், ஸ்ரீதர், சக்திவேல், ரவிச்சந்திரன், கோகுல்ராஜ், முரளி, தகவல் தொழில் நுட்ப பிரிவு ஜெகதீஸ்வரி சத்யராஜ், எழில்ராஜ், தொழிற் சங்க செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு வரவேற்றார்.

கூட்டத்தில், ஒன்றிய நிர்வாகிகள் மனோகரன், மஞ்சுளா, ரமேஷ், அழகேசன், வழக்கறிஞர்கள் பாக்கியராஜ், சஞ்சய் காந்தி, திவ்யா, விஜயசாரதி, கமல், ரத்தினவேல், பாலசுப்ரமணி, பலராமன், குமரவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை தாங்கி பேசுகையில், 'அ.தி.மு.க., ஒவ்வொரு காலகட்டதிலும் கரைந்து விடும் என கூறினார்கள். ஆனால், கட்சிக்கு துரோகம் செய்தவர்கள்தான் காணாமல் போய் விட்டனர். தொண்டர்களை நம்பி இருக்கிற இயக்கமாக அ.தி.மு.க., செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க.,வைப் பற்றி தவறாக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களுக்கு, நிர்வாகிகள் பதிலளித்து பதிவு செய்ய வேண்டும்' என்றார்.

Advertisement