சாலையை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டம்
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே சாலையை சீரமைக்காததை கண்டித்து நாற்று நடும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதில், அருங்குருக்கை கிராமத்தில் தெற்கு தெரு, மன்மதன் கோவில் தெரு, பாஞ்சாலி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.
சாலையை சீரமைக்க கோரி பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனை கண்டித்து, நேற்று காலை கிராம பெண்கள் சாலையில் தேங்கிய சகதியில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement