என்.எஸ்.எஸ்., நிறைவு விழா

செஞ்சி: செஞ்சி அடுத்த பொன்பத்தி ஊராட்சியில் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா நடந்தது.

முகாமில் ஏரிக்கரையில் பனைவிதை நடுதல், கால்நடை மருத்துவ முகாம், கிராம சபையில் பங்கேற்பு, காந்தி ஜெயந்தி விழா, போதை ஒழிப்பு விழிப்பு ஊர்வலம், மொபைல் போன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாணவர்கள் நடத்தினர்.

இதன் நிறைவு விழாவிற்கு தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் துரை, ஊராட்சி தலைவர் அனுசுயா முன்னிலை வகித்தனர். முதுநிலை வருவாய் ஆய்வாளர் கண்ணன் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மாணிக்கம், ஆசிரியர் முத்துக்குமரன் வாழ்த்திப் பேசினர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ஏழுமலை முகாம் அறிக்கை வாசித்தார். உதவி திட்ட அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Advertisement