தேசிய டென்னிசில் சாதித்த மாணவருக்கு ரூ.3 லட்சம்

வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் காசிபாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் - -ஸ்ரீமதி மகன் ரெத்தின்பிரணவ் 17.

இவர் சென்னை வேலம்மாள் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். சிறு வயது முதல் டென்னிஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவரது ஆர்வத்தை புரிந்து பெற்றோர் ரெத்தின் பிரணவை 7 வயதிலேயே டென்னிஸ் பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டனர்.

இவர் இந்தியா, ஆசியா அளவில் நடந்த ஏராளமான போட்டிகளில் பங்கேற்று 100-க்கும் அதிகமான வெற்றிக்கோப்பைகளை வென்றுள்ளார். இதுவரை அமெரிக்கா, ஜப்பான், துபாய் உள்ளிட்ட 15 நாடுகளில் விளையாடியுள்ளார். மூன்று முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டமும் பெற்றுள்ளார்.

செப்.4- டில்லியில் நடந்த பெனஸ்டா தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் எதிர்த்து விளையாடிய நிதின்குமாரை 27, 6-4, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் ரெத்தின் பிரணவ் வெற்றி பெற்றார். இவருக்கு பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது.

Advertisement