மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரவக்குறிச்சி: மின் கட்டண உயர்வை கண்டித்து, பள்ளப்பட்டி ஷா நகர் கார்னரில் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பை அமல்படுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளபட்டி நகரத் தலைவர் முகமது ஹனிபா தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக், மாநில செயற்குழு உறுப்பினர் பாதர் மார்க் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பள்ளப்பட்டி நகர செயற்குழு உறுப்பினர் சையது அபாஸ் அலி நன்றி கூறினார்.

Advertisement