மஹாராஷ்டிரா கவர்னருடன் மாலத்தீவு அதிபர் சந்திப்பு

மும்பை: மாலத்தீவுகள் அதிபர் முகமது முய்சு இன்று மஹராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார் மாலத்தீவு அதிபர் முகமது முயசு, பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோரை சந்தித்து பேசினார்.

பின்னர் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணனை கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இந்தியா -மாலத்தீவு இடையே பல்வேறு துறை வளர்ச்சி மற்றும் சுற்றுலா உள்கட்டமைப்பு குறித்து விவாதித்தார்.

Advertisement