தொப்பூர் இரட்டை பாலம் தடுப்பில் லாரி மோதி விபத்து

தொப்பூர் இரட்டை பாலம்
தடுப்பில் லாரி மோதி விபத்து
தர்மபுரி, அக். 9-
கர்நாடக மாநிலம், பெங்களுருவை சேர்ந்த டிரைவர் சிவோ, 26. இவர் பெங்களூருவில் இருந்து, மதுரைக்கு கன்டெய்னர் லாரியில் பார்சல் ஏற்றி வந்தார். கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை, தர்மபுரி மாவட்டம், தொப்பூர் இரட்டை பாலம் அருகே, நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் இடது புற, தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் சிவோ லேசான காயங்களுடன் தப்பினார். விபத்தால் சிறிது நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement