பஞ்சாலை தொழிலாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்


பஞ்சாலை தொழிலாளர்கள்
கோரிக்கை ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, அக். 9-
பஞ்சாலை தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., தர்மபுரி மாவட்ட டெக்ஸ்டைல் மில் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட பொதுச்செயலாளர் கண்ணதாசன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் நகராசன், மாவட்ட செயலாளர் ஜீவா உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், 2023- - 2024ம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணை தொகையாக, 20 சதவீதம் வழங்க வேண்டும். ஒப்பந்தம் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு பாரபட்சமின்றி, போனஸ் வழங்க வேண்டும். தர்மபுரியில் இ.எஸ்.ஐ., அலுவலகம் திறப்பதை உறுதிபடுத்த வேண்டும். தர்மபுரியில் ஏ.சி.எல்., கேம்ப் அலுவலகம் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Advertisement