சாலையில் குவிந்துள்ள குப்பை சுகாதார சீர்கேடு அபாயம்


சாலையில் குவிந்துள்ள குப்பை
சுகாதார சீர்கேடு அபாயம்
கரூர், அக். 9--
கரூரில், ஈரோடு சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்துக்குட்பட்ட வேலுசாமிபுரத்தில், ஈரோடு சாலை ஓரத்தில் வீடுகளில் இருந்து கொண்டு வந்து கொட்டப்படும் குப்பையை, அப்புறப்படுத்தப்படாமல் மலைபோல குவிந்து கிடக்கின்றன. குப்பைகளிலிருந்து துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியினருக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இங்கு, தேங்கும் குப்பைகளை அங்கேயே எரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு குப்பைகள் அதிகமாக தேங்கும்போது, துர்நாற்றம் வீசுகிறது. ஈக்கள், கொசுக்களால் அதிக தொல்லை ஏற்படுகிறது. எனவே, இங்குள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement