போலி நகை அடகு வைத்து மோசடி மேலும் ஐந்து பேர் கைது

திருவாலங்காடு:ஆந்திர மாநிலம், மல்லாரெட்டி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடைய்யா மனைவி லதா என்ற மங்கம்மாள், 48.

இவர் திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரத்தில் ரேகா என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடையில் கடந்த மாதத்தில் இருமுறை 49 கிராம் தங்க நகையை அடகு வைத்து, ரூ.2.15 லட்சத்தை கடனாக பெற்றார்.

இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் அடகு வைத்த நகைகளை சோதனை செய்தபோது அனைத்தும் போலி என தெரியவந்தது.

இதையடுத்து நகை அடகு கடையின் உரிமையாளர் ரேகா அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த கனகம்மாசத்திரம் போலீசார் போலி நகை கொடுத்து ஏமாற்றிய மங்கம்மாவை நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்தனர்.

அவர் அளித்த தகவலின்படி, மேலும் இதில் தொடர்புடைய ஆந்திர மாநிலம் புத்துாரை சேர்ந்த சந்திரசேகர், 39, மதனபள்ளியை சேர்ந்த ராமாஞ்சலு, 50, ரேணிகுண்டாவை சேர்ந்த ஹரித்தா, 33 மற்றும் திருத்தணி வி.கே.என். கண்டிகையை சேர்ந்த ரேகா, 28 துளசி, 28 ஆகிய ஐந்து பேரை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement