கார் மோதி ஒருவர் பலி
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.
விழுப்புரம், விராட்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் சையது காசிம், 57; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 7ம் தேதி அன்று இரவு 8:00 மணிக்கு தனது ஸ்கூட்டரில் விக்கிரவாண்டிலிருந்து திண்டிவனம் நோக்கி பைபாசில் சென்றார். அப்போது அவர் மீது கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது.
படுகாயமடைந்த சையது காசிம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை இறந்தார்.
விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement