அனுமதியின்றி பேனர் போலீசார் வழக்கு

புதுச்சேரி: சாலையில் அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரியில், பொது இடங்களில் பேனர் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 5ம் தேதி வழுதாவூர் சாலையில் அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நேற்று முன்தினம் கொடுத்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement