முகவரி கேட்பதுபோல் நகை பறிப்பு
பெரும்பாக்கம்,
மேடவாக்கம் அடுத்த, பெரும்பாக்கம், நுாக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 45; தனியார் கல்லுாரி பேருந்து ஓட்டுனர்.
இவரது மனைவி புஷ்பா, 41, நேற்று முன்தினம் மாலை, அருகே உள்ள முருகன் கோவிலுக்கு சென்று, வீட்டுக்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது, டூ - வீலரில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவர், புஷ்பாவிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து, அவர் அணிந்திருந்த 11 சவரன் தாலிச் செயினை இழுத்துள்ளனர்.
புஷ்பா போராடிய நிலையில், அவரை கீழே தள்ளி, தாலிச் செயினை அறுத்து, அங்கிருந்து தப்பினர்.
புஷ்பாவுக்கு கை, கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டது. அவர், அப்பகுதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின், பெரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். 'சிசிடிவி' காட்சிகளை வைத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement