காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த அனுமதி எப்போது

சென்னை:உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக, காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துகின்றன. ஆனால், வன உயிரின சட்டப்படி, இவை பாதுகாக்கப்படும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

காட்டுப் பன்றிகளை கொன்றால் வழக்கு பதிவு செய்யும் அளவுக்கு சட்ட வழிமுறைகள் உள்ளன.

கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காட்டுப் பன்றி களால் விவசாயிகள்கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அவற்றை சுட்டுக் கொல்ல, அரசு அனுமதிக்க வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது.

இதற்கான வழிமுறைகளை பரிந்துரைக்க,தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் ஸ்ரீநிவாஸ் ஆர் ரெட்டி தலைமையில், 19 பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இக்கமிட்டி கேரளாவில் பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தும் முறைகளையும், உள்ளாட்சிகள் வாயிலாக மேற்கொள்ளப்படும் நடைமுறைகளையும்ஆராய்ந்து வருகிறது.

அதன் அடிப்படையில், தமிழக அரசுக்கு பரிந்துரைகள் அளிக்கப்பட உள்ளது.

, வனத் துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:தமிழகத்தில் பசுமை பரப்பை, 33 சதவீதமாக உயர்த்த, பசுமைதமிழகம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இதற்கு நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு, பாதை அமைப்பது உள்ளிட்ட விஷயங்களில் சலுகை வழங்குவது குறித்துஆராய்ந்து வருகிறோம்.

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தும் விஷயத்தில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியின் பரிந்துரைக்காக காத்திருக்கிறோம். கமிட்டி அறிக்கை கிடைத்தவுடன், அரசின் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement