இருளில் கோயில் வளாகம்

சோழவந்தான்: சோழவந்தான் பேரூராட்சி ஜெனகை மாரியம்மன் கோயில் முன் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்குகள் பழுதானது.


இதனை சரி செய்ய பேரூராட்சி நிர்வாகம் அனைத்து விளக்குகளையும் அகற்றினர். ஒன்றரை மாதங்களாக பழுதை சரி செய்து விளக்குகளை மீண்டும் அமைக்கவில்லை. இதனால் இப்பகுதி இருள் சூழ்ந்து உள்ளது. இரவு நேரங்களில் பக்தர்கள் கோயில்களுக்கு வந்து செல்வது மற்றும் போக்குவரத்து பாதிக்கிறது. பேரூராட்சி நிர்வாகம் பழுதான மின்விளக்குகளை சீரமைத்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

Advertisement