ஓரியூர் ரோடு சீரமைப்பு

திருவாடானை: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருவாடானை-ஓரியூர் ரோடு சீரமைக்கபட்டது.திருவாடானையில் இருந்து ஓரியூர் செல்லும் ரோட்டில் ஓரியூர் அருளானந்தர் சர்ச் அருகே பள்ளமாக இருந்தது. இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்பவர்கள் தவறி விழுந்து காயமடைந்தனர்.


இதுகுறித்த செய்தி அக்.8ல் தினமலர் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று திருவாடானை நெடுஞ்சாலைத்துறையினர் பள்ளத்தை மூடி சீரமைத்தனர்.

Advertisement