பொங்கல் விழா

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் வடக்குப்பட்டி பட்டத்தரசி அம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது.

புரட்டாசி 3 வது வாரம் திங்கள்கிழமையன்று பொங்கல் விழா துவங்கி 2 நாட்கள் நடக்கும். முதல் நாளன்று அம்மனுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி பெண்கள் பொங்கல் பானைகளுடன் ஊர்வலமாக வந்து, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

Advertisement