மகாகவி தின விழா போட்டிகள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை அறிவியல் கல்லுாரியில் மகா கவி தினவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

மகா கவி பாரதியின் 103 வது நினைவு நாளை சிறப்பிக்கும் வகையில் கல்லுாரியில் மகாகவி தின விழாநடந்தது. தாளாளர் வேலு மனோகரன் தலைமை வகித்தார்.

கல்லுாரி செயலாளர் சகுந்தலா முன்னிலை வகித்தார். முதல்வர் ரஜனி வரவேற்றார். இளையான்குடி ஜாஹீர் உசேன் கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் கா.அப்துல்ரஹீம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.3000, இரண்டாம் பரிசு ரூ.2000, மூன்றாம் பரிசு ரூ.1000 வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கல்லுாரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தமிழ்த் துறைத்தலைவர் கலா நன்றி கூறினார்.

Advertisement