கிழக்கு கடற்கரை சாலையில் கால்நடைகளால் அபாயம்

திருப்புல்லாணி,: ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி வழியாக கீழக்கரை செல்லும் கடற்கரைச் சாலையில் அதிகளவு கால்நடைகள் திரிவதால் விபத்து அபாயம் உள்ளது.

இங்கு அருகில் மேய்ச்சல் நிலங்களுக்கு செல்லும் ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் கிழக்கு கடற்கரைச் சாலையின் பிரதான பகுதியை கடந்து செல்லும் போது வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. கடந்த ஒரு மாதத்தில் ஆடு, மாடுகள் மீது மோதியதில் ஐந்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் நிகழ்ந்துள்ளது.

இதனால் டூவீலர் ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ராமநாதபுரம் முதல் கீழக்கரை வரை உள்ள 17 கி.மீ.,ல் கால்நடைகள் குறித்த விழிப்புணர்வை அப்பகுதி வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தவும், விழிப்புணர்வு பலகை வைக்கவும் வேண்டும்.

Advertisement