பஸ் வசதி கோரி எம்.பி.,யிடம் மனு

தேனி : பூதிப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார். பள்ளித்தலைமை ஆசிரியர் பிருந்தா தேவி முன்னிலை வகித்தார். விழாவில் பள்ளி சார்பில் எம்.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டது.

மனுவில், பள்ளிக்கு பூதிப்புரத்தை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து மாணவர்கள் வருகின்றனர்.

பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் புத்தக்க பையை சுமந்து 4 கி.மீ., நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே, தேனியில் இருந்து பூதிப்புரம்,வளையபட்டி, கோடாங்கிபட்டி, அரசு பள்ளி,பூதிப்புரம் மார்க்கத்தில் காலை 8:45 மணிக்கும் மாலை 4:30 மணிக்கும் டவுன் பஸ் இயக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் பஸ் வசதி ஏற்படுத்திட உதவ வேண்டும் என கோரினர்.

விழாவில் பேரூராட்சி தலைவர் கவியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவை உதவிதலைமை ஆசிரியர் பிரதீபா ஒருங்கிணைத்தார்.

Advertisement