மரத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஆனைமடு பகுதி சேர்ந்தவர் மாரிமுத்து, 45; விவசாயி. நேற்று முன்தினம் விவசாய நிலத்தில் மரம் சுத்தம் செய்தபோது தவறி விழுந்து காயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வடப்பொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement