என்.பி.ஆர்.ல் கபடிகால்பந்தாட்ட போட்டி

நத்தம்: -நத்தம் என்.பி.ஆர்., கலை, அறிவியல் கல்லுாரியில் மதுரை காமராஜ் பல்கலை அளவிலான ஏ மண்டல கபடி ,கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது.

மண்டல அளவில் 12 கல்லுாரிகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதை என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக்கல்லுாரி முதல்வர் மருதுகண்ணன் துவக்கி வைத்தார். கபடி இறுதி போட்டியில் வக்பு வாரியக்கல்லூரி அணி, யாதவா கல்லூரி அணியை 34:-20 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

கால்பந்தாட்ட போட்டிகளை என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் தபசுகண்ணன் துவக்கி வைத்தார்.

இதன் இறுதி போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லுாரி அணியை யாதவா கல்லுாரி அணி வென்றது. வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் தபசுகண்ணன் கோப்பைகளை வழங்கினார்.இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை என்.பி.ஆர்., கல்விக்குழும உடற்கல்வி இயக்குனர்களும் கல்லூரி நிர்வாகத்தினரும் செய்திருந்தனர்.

Advertisement