ஆசிரியரை தாக்கிய நபர் மீது வழக்கு

சின்னசேலம்: பெருமங்களம் கிராமத்தில் ஆசிரியரை தாக்கிய நபர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

சின்னசேலம் அடுத்த ஈரியூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன், 62. இவர், பெருமங்களம் அரசு மேல் நிலை பள்ளியில் தொகுப்பூதிய அடிப்டையில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 8 ம் தேதி மாலை பள்ளி முடிந்து தனது மனைவியுடன் வீட்டிற்கு சென்றார். பள்ளி எதிரே அவரை வழிமறித்த பெருமங்களம் கிராமத்தை சேர்ந்த முருகன் 47, என்பவர் மனோகரனை திட்டி தாக்கினார். காயமடைந்த மனோகரன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புகாரில் முருகன் மீது கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement