பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகோபால், சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் அசோக் குமார், துணை சேர்மன் அஞ்சலை கோவிந்தராஜ், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விஜய் ஆனந்த், ஊராட்சி தலைவர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு சைக்கிளை வழங்கினார். துணை தலைமை ஆசிரியர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement