கஞ்சா விற்ற 2 பேர் கைது

கச்சிராயபாளையம்: மாதவச்சேரி கிராமத்தில் கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை தலமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை மாதவச்சேரி கிராமத்தில் ரோந்து சென்றனர்.

அப்போது பாப்பகால் ஓடை அருகே நின்றிருந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அவர்கள் பாலித்தின் கவரில் 50 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள், மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் தினேஷ் 28, மாணிக்கம் மகன் சந்திரசேகர், 28, என, தெரிய வந்தது. இது குறித்து கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.

Advertisement