கள்ளக்குறிச்சியில் 18ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரிசி ஆலை உரிமையாளர் சங்க மண்டபத்தில் 18ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும் 18ம் தேதி கள்ளக்குறிச்சி துருகம் சாலை அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் மண்டபத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் தமிழகத்தை சார்ந்த வங்கி, நிதி, வாகன உற்பத்தி, காப்பீடு, சில்லரை விற்பனை துறையை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியிடங்களை நிரப்ப உள்ளனர்.

முகாமிற்கு 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ., பி.டெக்., முடித்த ஆண், பெண் ஆகியோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18ம் தேதி காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

இத்தகவலை கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement