சுப்ரமணி சுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி சுப்ரமணி சுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.

ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிேஷகம் கடந்த அக்., 22ம் தேதி நடந்தது.

தொடர்ந்து, நடந்த மண்டல பூஜையில் தினமும் மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. கும்பாபிேஷகம் முடிந்து 48வது நாளான நேற்று மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.

நிகழ்ச்சியில், விக்னேஷ்வர பூஜை, கலச ஆவாகணம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு, விநாயகர், மூலவர் சுப்ரமணியர், துர்கையம்மன், தட்சணாமூர்த்தி, கடம்பன், இடும்பன், நவகிரகங்கள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. திரளான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement